what-they-told

img

எடை குறைவாகப் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரைக்காப்பாற்றி அரசு மருத்துவமனை சாதனை

திருப்பூர், ஆக. 10 - எடை குறைவாகப் பிறந்த இரட்டை  குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப் பில்லை என்று பெற்றோர்கள் கைவிட்ட நிலையில் திருப்பூர் அரசு  மருத்துவமனையில் வைத்துப் பராம ரித்து அந்த குழந்தைகளை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் ஓலப்பாளை யத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அன்று ஒரு  ஆண் மற்றும் ஒரு பெண் என  இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள னர். பிறக்கும்போது ஆண் குழந்தை  900 கிராம், பெண் குழந்தை 700 கிராம்  என மிகக் குறைவான எடையில் இருந் தனர். எனவே மிகக் குறைவான எடை யில் பிறந்த இக்குழந்தைகள் உயிர் பிழைக்காது என்று பெற்றோர்கள் கருதி அப்போதே திருப்பூர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வா கத்தினரிடம் ஒப்படைத்தனர். மருத் துவக் கல்லூரி முதல்வர் முருகே சன் ஆலோசனைப்படி இருப்பிட  மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ் ணன், குழந்தைகள் நல நலப்பிரிவு துறை தலைவர் டாக்டர் செந்தில்கு மார்,

மருத்துவர்கள் ராஜகோபால், தனசேகரன், பிரியா விஸ்வாசம், மற் றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு செவி லியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுமார் 130 நாட்கள் தீவிர சிகிச்சை பிரி வில் இரு குழந்தைகளையும் வைத்து  கண்காணித்து வந்தனர். 900 கிராமில்  இருந்த ஆண் குழந்தை தற்போது 2  கிலோ 030 கிராமும், 700 கிராமில் இருந்த பெண் குழந்தை 1 கிலோ 830  கிராம் வரை அதிகரிக்க வைத்து உள்ள னர். இந்தக் குழந்தைகளை பராமரிக்க  முடியாத அவர்களின் பெற்றோரை வர வழைத்து, குழந்தைகளின் எதிர்காலம்  கருதி குழந்தைகள் நலக் குழுவில் முன் னிலைப்படுத்தி புதன்கிழமை அன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர்களிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்து உயிர் பிழைக்காது என்று கரு தப்பட்ட இரட்டைக் குழந்தைகளை காப்பாற்றி பராமரித்து எடையை அதி கரிக்க செய்த மருத்துவர்களின் சேவைப் பணி மிகப் பெரிய சாதனை யாக பாராட்டு பெற்றுள்ளது.