what-they-told

img

இன்று கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவக்கம்

திண்டுக்கல், மே 25- மலைகளின் இளவரசி என போற்றப்படுகிற கொடைக்  கானலில் 60 ஆவது மலர்க்கண்காட்சி இன்று தொடங்கு கிறது.  மே 26 வெள்ளியன்று காலை 11 மணி அளவில்  துவங்கும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்று லாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், உணவு-உணவுப்  பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகிய 4 அமைச்சர்கள்  கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுகிறார்கள். திண்டுக்கல் ஆட்சியர் எம்.என்.பூங் கொடி நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். (ந.நி)

;