what-they-told

img

ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

தருமபுரி, ஜூன் 18- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநா டிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதி கரித்திருக்கிறது. மேலும் அதிகரிக்கும் என்பதால் ஒகேனக்கல் பிரதான அருவி, ஐவர்பாணி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள் ளவும் மாவட்ட ஆட்சியர் சாந்தி தடை விதித்திருக்கிறார். இது பொது மக்கள் மற்றும்  சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை  கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள தால் ஆற்றைக் கடந்து செல்லவும் வேண்டாம். மறு உத்தரவு வரும் வரை  இந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். 

;