திருவனந்தபுரம், ஜுலை 11- கேரளாவில் திங்களன்று (ஜுலை 11) பரவலாக மழை பெய்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மாவட்டங்களைத் தவிர மற்ற 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தொடர் மழை காரணமாக காசர்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகள் மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பண்டாரி ஸ்வகத் ரன்வீர்சந்த் அறிவித்துள்ளார். கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது. முன்னதாக அறிவிக்கப்பட்ட எஸ்எஸ்எல்சி எஸ்இ தேர்வுகளுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வயநாட்டில் உள்ள தொழில்முறை கல்லூரிகள், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது.