ஒலிம்பிக், காமன்வெல்த், தடகள மற்றும் இதர சாம்பியன்ஷிப் தொடர்களில் பங்குபெறுவதற்கான முதன்மையான வாய்ப்பை கொடுப் பது தேசிய விளையாட்டுப் போட்டி கள் தான். இந்த போட்டியில் பங்கு பெறு வதற்கும் (வீரர்களுக்கு இடையே), போட்டியை நடத்துவது தொடர்பாக இந்திய மாநிலங்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்படும். இந்திய ஒலிம்பிக் சங்கம் இதனை சமாளித்து எதாவது ஒரு மாநிலத்தைச் தேர்வு செய்யும். தற்போது 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜ ராத் மாநிலம் சூரத்தில் தற்போது நடை பெற்று வரும் நிலையில், 37-வது தேசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை கோவாவிற்கு வழங்குவதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. சூரத்தில் அக்டோபர் 12-ஆம் தேதி அன்று நடைபெறும் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், 37-வது தேசிய விளை யாட்டுப் போட்டிக்கான இந்திய ஒலிம்பிக் கொடியை கோவா பிரதிநிதி கள் பெறுவார்கள் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே 2008-ஆம் ஆண்டில் தேசிய விளையாட்டுப் போட்டி நடத்தும் உரிமையை கோவா பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.