உதகை, ஏப்.11- கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், பூண்டு அறுவடையை விவசா யிகள் தள்ளிபோட்டு உள்ள னர். நீலகிரி மாவட்டம், கோத்த கிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதான மாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்ற னர். இதேபோன்று ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட காய்கறிகளை யும் சாகுபடி செய்து, கணிசமான லாபம் ஈட்டி வருகின்ற னர். நீலகிரியில் விளையும் வெள்ளைப்பூண்டு அதிக காரத் தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் கொண்டதாக வும் இருப்பதால் நீலகிரி பூண்டுக்கு எப்போதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக் கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் தங்களது தோட்டங் களில் ஆர்வத்துடன் பூண்டு பயிரிட்டனர். அவை தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால், காய்கறி மண்டிகளில் பூண்டு கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளதால், அறுவடை செய்வதை தாமதித்து வருகின்றனர். அவர்கள் கொள்முதல் விலை உய ரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.