சென்னை, ஆக.31 புரோஸ்டேட் விரிவாக்கத்தை முன்கூட்டியே பரிசோதித்து அதன் தன்மையை அறிந்து கொண்டு சிகிச்சை பெற்றால் பிற்காலத்தில் பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பலாம் என்று மருத்து வர்கள் கூறுகிறார்கள். புரோஸ்டேட் (விந்து உற்பத்தி பை) வீக்கம் பொது வாக 45 வயதிற்கு பிறகு ஏற்படும். இது வழக்க மான அளவில் (வால்நெட் அளவு) இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அது பெரிதாகி சிறுநீர் பாதையை அழுத்தினால் அல்லது சிறு நீரில் ரத்தம் கசிவு ஏற்பட்டால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப டுத்தும். எனவே பிஎஸ்ஏ என்ற பரிசோதனை மூலமாக பாதிப்பின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். இதற்கு ரூ.400 தான் செலவாகும் என்று டாக்டர் ராஜமணிக்கம் கூறினார்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் கூட சிறுநீர்ப்பை நிரம்பியிருப்பதாக உணர்தல், சிறுநீர் கழிக்க காத்திருக்க முடியாதது, பலவீனமான சிறுநீர் ஓட்டம்,சொட்டு சொட்டாக சிறுநீர் கழித்தல், பல முறை நிறுத்தி நிறுத்தி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கத் தொடங்குவதில் சிக்கல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். இத னால் பிற்காலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை தவிர்க்கலாம்.இந்த பிரச்சனை பற்றி வெட்கப்படக்கூடாது. புரோஸ்டேட் புற்று நோய் போன்ற அதிக ஆபத்தான நோய் ஆகும். எனவே, உண்மையான பிரச்சனை என்ன, எவ்வ ளவு கடுமையானது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு மருத்துவர் அல்லது நிபுணரைச் சந்திப்பது மிக முக்கியம் என்று மருத்துவர் சிவராமன் கூறினார்.