what-they-told

img

நீட் தேர்வில் மோசடி: மாணவர்கள் கைரேகை பதிவு

சென்னை,அக்.15- மருத்துவக்கல்லூரி முதலாமாண்டு மாண வர்களின் கைரேகைகளை பதிவு செய்து விசா ரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்கு நரகம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து  மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக உதித் சூர்யா, ராகுல், பிரவின், இர்பான், பிரி யங்கா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்ட னர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறை யினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

இதற்கிடையே மருத்துவக் கல்லூரி மாண வர்கள் சேர்க்கை தொடர்பாக மருத்து வக் கல்வி இயக்குநரகமும் சில நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்  முதல் கட்டமாக இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் ஆவ ணங்கள் சரி பார்க்கப்பட்டன. ஹால் டிக்கெட்,  புகைப்படம், கையெழுத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதனையடுத்து, கைரேகை களை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனி யார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இது  தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர கம் தனித் தனியே இ-மெயில் மூலம் கல்லூரி  முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. அதில், “முதலாமாண்டு மருத்துவ  மாணவர்களின் மூன்று கைரேகைப் பதிவு களை சேகரித்து அனுப்புங்கள். அவை  தடயவியல் பரிசோதனைக்குட்படுத்தப்ப டும்” என்று கூறப்பட்டுள்ளது.

கைரேகைப் பதிவுகளை மாணவர்கள் முதல்வர் அலுவலகத்தில் வைத்து கொடுக்க  வேண்டும். அப்போது அனாடமி, பிசியா லஜி, பயோ கெமிஸ்ட்ரி ஆகிய மூன்று துறை களின் பேராசிரியர்கள் முன்னிலையில் இது நடைபெற வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. முதலாமாண்டு மாணவர்களிடம் கைரேகை பதிவு செய்யும் நடவடிக்கைகளை 5 நாட்களுக்குள் முடித்து, அதை ‘சீல்’ வைத்த உறையில் வைத்து அனுப்ப வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் கை ரேகைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.