what-they-told

img

விருதுநகர் சந்தை : பாமாயில் விலை சரிவு பாசிப்பருப்பு விலை உயர்வு

விருதுநகர், நவ.20- விருதுநகர் சந்தையில் பாமாயில் விலையானது தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. பாசிப்பருப்பு, கடலை புண்ணாக்கின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளது. விருதுநகர் சந்தை யில் வாரந்தோறும் அத்தியாவசிய உண வுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. அதில் கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் விலை ரூ.1690 க்கு விற்கப் பட்டு வந்தது. இந்த வாரம் ரூ.70குறைந்து ரூ.1620க்கு விற்பனையாகிறது. இதேபோல் கடந்த வாரம் 16 கிலோ கடலை எண்ணெய் விலை ரூ.3050க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.50 குறைக்கப்பட்டு ரூ.3ஆயிரத்திற்கு கடலை எண்ணெய் விற்கப்படுகிறது. அதேவேளை, கடந்த வாரம் ரூ.9300க்கு விற்பனை யான பாசிப்பருப்பு, ரூ.300வரை விலை உயர்ந்து தற்போது ரூ.9600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாசிப்பயறு ( இந்தியா) 100 கிலோவின் விலை  கடந்த வாரம் ரூ.7300க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.100 உயர்ந்து, தற்போது ரூ.7400க்கு விற்பனையாகிறது. மேலும், 100 கிலோ  கடலை புண்ணாக்கின் விலையானது கடந்த வாரத்தை விட ரூ.200 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.4400க்கு விற்கப்படுகிறது. பிறபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

;