what-they-told

img

கங்கைகொண்டசோழபுரத்தில் நாணய அச்சு, சுடுமண் முத்திரை

தருமபுரி/அரியலூர், ஜுன் 29 - தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் அகழாய்வில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா விற்குட்பட்ட பூதிநத்தம் கிராமத்தில் கோடாரியும், அரியலூர் மாவட்டம் கங்க கொண்ட சோழபுரத்தில் நாணய அச்சு  சுடுமண் முத்திரையும் கண்டறியப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட பூதிநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லி யல் துறையால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் அகழாய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இவ்வகழாய்வில் இது வரை 17 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு 52-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டறியப்பட்டு ள்ளன.  இதில் ஜூன் 10-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட கற்கருவியானது சி-9 என்னும் அகழாய்வுக் குழியில் சுமார் 36 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப்பெற்றது  ​தற்போது அதே போன்ற மற்றொரு கற்கருவி டி-9 என்னும் அகழாய்வு குழியில் ஜூன் 28-ஆம் தேதி (புதன்) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கரு வியின் முனை மிகவும் மழுங்கியும் உடைந்தும் காணப்படுவதால் இக்கரு வியின் மூலம் மரம் வெட்டவோ அல்லது வேட்டையாடவோ பயன்படுத்தி இருக்கலாம் எனக் கருத முடிகிறது.  இக்கற்காலக் கருவிகள் புதிய கற்காலத்தில் நிலத்தினை உழும் வகை யில் ஏர்க்கலப்பையாகவும், வெட்டு வதற்கு கோடாரியாகவும் பயன்பட்டி ருக்கக்கூடும். இக்கருவி டோலராய்ட்  என்ற மூலக் கல்லால் செய்யப் பட்டுள்ளது.

​பூதிநத்தம் கள ஆய்விலும், அகழாய்விலும் இதுவரை ஆறு புதிய கற்காலக் கருவிகள் வெவ்வேறு அகழாய்வுக் குழிகளில் வெவ்வேறு ஆழத்தில் கிடைத்துள்ளன. தொடர்ச்சி யாக புதிய கற்காலக் கருவிகள் கிடைக்கப் பெறுவதாலும் இதனுடன் சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், தக்களி, வட்ட சில்லுகள், சூது பவள மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண்ணலான உருவங்கள் கிடைக்கப் பெறுவதாலும் இப்பகுதி இடைக்கால வரலாற்று தொடக்க காலத்தைச் சார்ந்ததாக கருத லாம்.  மேலும் இடைக்காலத்திலும் புதிய கற்காலக் கருவியானது தொடர்ச்சி யாக இப்பகுதியில் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் எனவும் கருத முடிகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்டசோழபுரம் அருகே மாளிகை மேடு என்ற இடத்தில் தொல்லியல் துறையினரால் மாநில தொல்லியல் துறையின் மூன்றாவது கட்ட  அகழாய்வில் பழங்கால நாணய அச்சு,  டெரகோட்டா முத்திரை மற்றும் உடைந்த சீனப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தொல்லியல் துறை யையும் கவனித்து வரும் நிதியமைச் சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதி வில், “அலைகடல் நடுவில் கலம் பல செலுத்திப் பூர்வ தேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட, தமிழ் நாட்டின் பெருமைக்குரிய பெருவேந்தன் இராஜேந்திர சோழனின் அரண்மனை அமைந்திருந்த கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேடு பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் துறை தொடர்ந்து அகழ்வாய்வினை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை சோழர் கால அரண்மனையின் பல  அடித்தளப் பகுதிகள் வெளிக்கொண ரப்பட்டுள்ளது, '

அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது சீன நாட்டைச் சார்ந்த உடை ந்த பீங்கான் துண்டு ஒன்றும், காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு மற்றும் சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகி யனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொதுயுகத்திற்குப் பின்னர் பதி னொன்றாம் நூற்றாண்டில், தமிழ்  நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலா வணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் அக்க சாலை கள் அமையப்பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப் பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரி விக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்” எனப் பதிவிட்டுள்ளார். சுடுமண்ணாலான முத்திரை சுமார் 150 சென்டிமீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றும் நாணய அச்சு மற்றும் சீனப் பொருட் கள் சுமார் 105 செ.மீ ஆழத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இரும்பு ஆணிகள், பானை ஓடுகள், உடைந்த சீனப் பொருட் களின்  துண்டுகள் மற்றும் பீங்கான்  பாத்திரங்கள், கண்ணாடி வளையல்கள் மற்றும் சிறிய மணிகள் அடங்கிய  460-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இந்தக் காலத்தில் கண்டறியப்பட்டுள்  ளது.  இதே போன்ற பொருட்கள் இரண் டாம் கட்ட அகழ்வாராய்ச்சியிலும் கண்டுபிடிக்கப்பட்டன.