புதுதில்லி, ஏப்.26 - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளில் தொற்று எண்ணிக்கை 6,934 என்றளவில் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையை விட, புதனன்று 40 சதவீதம் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தியாவில் புதிதாக 9,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணி க்கை 61,013 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 11,967 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப் பட்டுள்ளது.