ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்தில் ஆப்பிள் விவசாயிகள் பங்கேற்பார்கள்
ஆப்பிள் விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு
இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா வின் காளிபாரியில் அகில இந்திய விவ சாயிகள் சங்கத்துடன் (AIKS) இணைந்த ஆப்பிள் விவசாயிகள் கூட்டமைப்பின் (AFFI) சார்பில் மாநாடு நடைபெற்றது. ஆப்பிள் விவ சாயிகள் கூட்டமைப்பின் (ஏஎப்எப்ஐ) இமாச்ச லப் பிரதேச மாநிலக் குழு நடத்திய இந்த மாநா ட்டில் ஏஎப்எப்ஐ ஒருங்கிணைப்பாளரும், குல்காம் (ஜம்மு-காஷ்மீர்) எம்எல்ஏவுமான முகமது யூசுப் தரிகாமி, கூட்டு ஒருங்கி ணைப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராகேஷ் சின்ஹா மற்றும் ஹூர் அஹ்மத், சஞ்சய் சவுகான், சோஹன் தாகூர் உள்ளிட் டோர் பங்கேற்று உரையாற்றினர். முகமது யூசுப் தாரிகாமி மாநாட்டு அரங்கில் நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில் முகமது யூசுப் தாரிகாமி பேசுகையில்,”நாட்டில் ஆப்பிள் விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்ற னர். இந்த சூழலில் அமெரிக்கா, விவசாயப் பொருட்களுக்கு பூஜ்ய வரி விதிக்க தூண்டு கிறது. ஆனால், நாங்கள் வரிகளை அதிகரிக்க கோருகிறோம், நீக்க அல்ல! எங்கள் கடின உழைப்பில் விளைந்த ஆப்பிள் பழங்களுக்கு உள்நாட்டு சந்தையில் நியாய மான வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதுவே எங்களது முதன்மையான கோரிக்கை. நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆப்பிள் விவசாயிகளின் பிரச்சனைகளை, நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமர் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதி வரை, அவர்கள் அனைவரும் மக்க ளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் தான். அமைச்சரவை அல்லது பிரதமர் ஆப்பிள் விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறக்கணித்தால், அது பொதுமக்களின் நம்பிக் கைக்குத் துரோகம் செய்யும் செயலாகும். ஆப்பிள் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க பிரதமரிலிருந்து நாடாளுமன்றம் வரை ஒவ்வொரு கதவையும் தட்டுவோம். நாட்டில் மற்ற மாநிலங்களை விட ஜம்மு- காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் புவியியல் மற்றும் காலநிலை சற்று வேறுபட லாம். ஆனால் வலியும் போராட்டங்களும் ஒன்றே. இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் பிரச்சனைகளில் ஒன்றுபட்டுள்ளனர். ஆப்பிள் விவசாயிகளின் நிலைமை குறித்த விஷயத்தில் அனைத்து விவசாயிகளும் ஒன்று பட்டுள்ளனர். தினசரி கூலிகளாக இருந்தாலும் சரி, தொழில்துறை தொழிலாளர்களாக இருந்தா லும் சரி, தொழிலாளர் வர்க்கம் போராடி வரு கிறது. குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி ஜூலை 9 அன்று நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தில் ஆப்பிள் விவசாயிகளும் பங்கேற்பார்கள்” என அவர் கூறினார். ராகேஷ் சின்ஹா தொடர்ந்து ராகேஷ் சின்ஹா செய்தியா ளர்களிடம் பேசுகையில்,”ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட் டத்திற்கு அகில இந்திய அளவில் விவசாயி கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு அளித்து வருகின்றன. இமாச்சலப் பிரதே சத்தில் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் சங்கங்க ளும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணையும். விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் முயற்சிகளில் இருந்து விவசாயிகளைப் பாது காப்பது, இறக்குமதி வரிகளை ரத்து செய்வ தை எதிர்ப்பது மற்றும் நில வெளியேற்றங்க ளுக்கு எதிராக இமாச்சலப் பிரதேச உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்வது ஆகியவை எங்கள் முக்கிய கோரிக்கைகளாகும்” என அவர் கூறினார்.