உதகை, ஆக.24- நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் செர்ரி பிளாசம் மலர்கள் தற்போது பூக்க தொடங்கியுள்ளன. செர்ரி பிளாசம் வசந்த காலத்தில் மலரும் ஒரு வகை பூக்களாகும். செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் அனைத்து இலை களும் உதிர்ந்து, மரம் முற்றிலும் பூவாக காட்சி அளிக்கும். வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மலர்களை சக்குரா பூக் கள் என்று தமிழகத்தில் அழைக்கின்றனர். ஆனால், இது ஜப்பான் நாட்டின் தேசிய மலர் ஆகும். இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குளிர்காலத்தில் அதிக மாக பூத்து வருகிறது. இந்த பூக்கள் மருத் துவ குணம் உடையது. சுமார் 30 அடி உய ரம் வரை மரங்களில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்களை தேடி தேனீக்கள், சிட்டுக்குருவி கள், அணில்கள் போன்றவை வரும். அங்கு மலர்ந்து உள்ள பூக்களை தின்று பசியாறும். செர்ரி பூக்களில் இருந்து ஷாம்பு, வாசனை திர வியங்கள் தயாரிக்கப்படுகின்றன. அட்லாண் டாவில் ஆண்டுதோறும் செர்ரிப்பூவுக்காக திருவிழா ஒன்றே நடத்தப்படுகிறது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக வனத்துறை ஊழியர்கள் உதகை, கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதி களில் சாலையோரம் செர்ரி மரக்கன்றுகளை நடவுசெய்து வளர்த்து வருகின்றனர். அவை தற்போது மலர்ந்து ரம்மியமாய் காட்சி அளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமின்றி செர்ரி மரங்க ளின் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.