அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்
சென்னை, பிப். 5- கல்வி மத்திய - மாநில அரசுகளுக்கு பொது வாக ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள நிலை யில், ‘நீட்’டுக்கு விலக்குகோரி இரு மசோ தாக்களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியதுபோலவே, மீண்டும் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோ தாவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில், தமிழ்நாடு அமைச்சர்களும் தங்கள் சார்ந்த கட்சியின் கொள்கை என்ன? மாநிலங்க ளின் உரிமைகள், மக்களின் அடிப்படை உரி மைகளை - மத்திய அரசின் ‘தடாலடி’ சட்டங் கள் கூறினாலும், அரசமைப்புச் சட்டம் மாநி லங்களுக்கு அளித்துள்ள உரிமைகளைப் பறி போக விடக்கூடாது என்று உணரவேண்டும்
தில்லியுடன் உறவுக்கு கைகொடுப்பது வேறு; ஆனால், உரிமைக்குக் குரல் கொடுக்க தயங்கக் கூடாது. எடுத்துக்காட் டாக, ‘நீட்’ தேர்வுக்கான விலக்கு கோரிய இரண்டு சட்டங்களை மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பியதை (குடியரசுத் தலை வர்) மத்திய அரசு ஏன் நிராகரிக்கவேண்டும்? என்ன காரணம் என்பதை அப்போதே கேட்டு உரிமைக் குரலை பதிவு செய்திருக்க வேண்டும். ஏன் தமிழ்நாடு அரசு டில்லியிலி ருந்து வந்த தகவலைக் கூட சட்டமன்றத்தில் வைக்காமல் மூடி மறைக்கவேண்டும்? இதை விட சமூக அநீதி வேறு என்ன இருக்க முடியும்? 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்ற மத்திய கல்வித் திட்டத்தின் அம்சத்தை ஏற்க மறுத்த புதுவை அரசு போல, தெளிவாக மத்திய அரசை வலி யுறுத்தி, முன்பு ‘நீட்’ விதிவிலக்குக்காக, விதி விலக்குக் கோரிய அதே மசோதாவை மீண்டும் - எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றி அனுப்பவேண்டும். மத்திய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நாடா ளுமன்றத்தில் கண்ணை மூடிக்கொண்டு அ.தி.மு.க.வினர் கைதூக்குவதை நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் வீரமணி மேலும் கூறியுள்ளார்.