எம் ஐ டி(MIT) பொறியியலாளர்கள் காற்றிலிருக்கும் கார்பன் டை ஆக்சைடை நீக்கும் புதிய முறையை கண்டறிந்துள்ளார்கள். ஒரு பெரிய சிறப்பு மின்கலமே இந்தப் புதிய கருவி. மின்னேற்றம் செய்யப்படும்போது அதன்மேல் செல்லும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடை அது உறிஞ்சிக்கொள்கிறது. மின்சாரத்தை டிஸ்சார்ஜ் செய்யும்போது சுத்தமான செறிவாக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகிறது. மற்ற முறைகளில் மிக அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு இருந்தால் மட்டுமே அதைப் பிரிக்க முடிந்தது. இந்த முறையில் காற்றில் இருக்கும் குறைந்த அளவு கார்பன் டை ஆக்சைடைகூட நீக்க முடியும். இந்தக் கருவி பாட்டில் பானங்கள் தொழில் தாவர உணவு தயாரிப்பு ஆகிய துறைகளில் பயன்படும்.