what-they-told

img

ஜல்லிக்கட்டை நிறுத்த பாஜகவினர் முயற்சி: அலகுமலை ஜல்லிக்கட்டு சங்கம் கண்டனம்

திருப்பூர், ஜன.2- அலகுமலை ஜல்லிக்கட்டு நடத்தும் இடம் தொடர்பாக பாஜகவினர் கொடுத்த அவதூறு செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டு இருந்தது. ஜல்லிக்கட்டை நிறுத் தும் பாஜகவினரின் முயற்சி இது என்று அலகுமலை ஜல்லிக்கட்டு சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு: சனி யன்று புத்தாண்டு தினத்தன்று தினமலர் நாளிதழில் அலகுமலை ஜல்லிக்கட்டு நடத் துவதற்காக குட்டைகளை மூடியதாகவும், அதை தூர்வார அனுமதிக்குமாறு கேட்டு  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள தாக செய்தி வெளிவந்துள்ளது. பாஜக பொங்கலூர் கிழக்கு விவசாய அணி செய லாளர் செந்தில்குமார் தினமலர் மூலம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.  நான்கு வருடம் ஜல்லிக்கட்டு நடந்த எந்த ஒரு இடத்திலும் குட்டையை மூட வில்லை. இல்லாத குட்டையை மூடியதாக தவறான தகவலை அவர் வெளியிட்டுள் ளார். பாஜகவை சேர்ந்த சிலர் அலகுமலை  ஜல்லிக்கட்டு நிறுத்துவதற்கு செய்யும் முயற்சி என்பது இதன் மூலம் வெட்ட வெளிச் சமாகிறது. இந்த செந்தில்குமார், சனியன்று காலையில் ஜல்லிக்கட்டு தலைவரிடம் பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. தவறான தகவலை வெளியிட்ட அவருக்கு அகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்கி றது. அலகுமலை ஜல்லிக்கட்டு நிறுத்துவ தற்கு முயற்சி செய்யும் சிலருக்கு பாஜ கவை சேர்ந்த சிலர் உதவுகிறார்கள். அவர் கள் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக கூறப் பட்டுள்ளது.