உலகளவில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதங்கள் அதிகரித்து வருவதால் எந்த உணவை எடுத்துக்கொண்டால் உடல் எடையை பராமரிக்கமுடியும் என்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
மனநிறைவை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளும் போது அது முழுமையின் உணர்வுகளைத் தக்கவைப்பதோடு சரியான உடல் எடையை பராமரிக்கவும் உதவும் என்று பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பாதாம் பருப்பை அத்தகைய ஒரு உணவாக அடையாளம் காட்டியுள்ளனர்.
பாதாம் பருப்பை எடுத்துக்கொள்ளும் போது அது பகல் நேர இடைவெளி பசியை குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும்இதன் கலோரி குறைவு என்பதால் இது ஆரோக்கியமான உணவாக இருப்பதாகவும் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் (பிரிட்டன்) உளவியலின் தலைவர் பேராசிரியர் கிரஹாம் பின்லேடன், தெரிவித்துள்ளார்.