what-they-told

img

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்.3- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலை ஒட்டிய பகுதியில் காற்றின் திசை மாறுபாடு மற்றும் வெப்பச்  சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

வட தமிழகம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 6 செ. மீட்டரும், நீலகிரியில் 5 செ. மீட்டரும், வால்பாறை யில் 4 செ. மீட்டரும், சேலம் மாவட்டம் ஓமலூர், நெல்லை மாவட்டம் செங் கோட்டையில் 3 செ. மீட்டரும் மழை பதி வாகியுள்ளது.

;