what-they-told

img

‘இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குக!’

மனோ கணேசன் கருத்து

கொழும்பு. டிச.14- இந்தியாவில் வாழ்கின்ற இல ங்கை அகதிகளுக்கு இரட்டை குடி யுரிமையை பெற்றுக்கொடுப்ப தற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன் னாள் இலங்கை அமைச்சருமான மனோ கணேசன் கருத்து தெரி வித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனைக்குள் தலையிட செய்ய தான் விரும்பவில்லை என கூறிய அவர், இலங்கையிலிருந்து அக திகளாக சென்ற மக்கள் தொடர் பாகவே கருத்து தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

வங்கதேசம், பாகிஸ்தான் மற் றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடு களிலிருந்து இந்தியாவிற்குள் வந்துள்ள அகதிகளுக்கு குடி யுரிமை வழங்கப்படும் அதே வேளை, இலங்கை அகதிகள் அந்த மசோதாவில் உள்வாங்கப் படாதது பாரபட்சமான விஷயம் என அவர் கூறினார். இலங்கை தமிழர் பிரச்சனை முடிந்து விட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து குறித்து பேசிய அவர் அமைச்சர் அவசரப்பட்டு அவதானிக்கக் கூடாது என்றும், இலங்கையில் யுத்தம் கிடையாது, கடத்தல், காணாமல் போதல் கிடையாது, தொல்லை கிடையாது என்ற விஷ யங்களை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்திருக்க லாம் என அவர் கூறினார்.

;