விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் அவுரி செடி சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த செடியின் தழைகளை மருத்துவத்திற்காக ஆராய்ச்சி செய்யும் மையம் தமிழத்தில் எங்கும் நிறுவப்பட வில்லை. எனவே, செஞ்சி பகுதியில் அத்தகைய மையம் நிறுவப்ப டுமா? என்று திமுக உறுப்பினர் மஸ்தான் வினவினார். இதற்கு பதில் அளித்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக் கண்ணு,“ அவுரித் தழையை விவசாயிகள் உலர வைப்பதற்காக ‘சூரிய கூடாரம்’அமைத்துக் கொடுக்கப்படும்” என்றார்.