வாஷிங்டன்,நவ.21- அமெரிக்க அரசாங்கம் இந்தி யாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற் பனை செய்ய ஒப்புதல் அளித்து ள்ளதாகவும் இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், உதிரி பாகங் கள், அவற்றை கையாள்வதற் கான பயிற்சி, தொழில்நுட்ப விவ ரங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த ராணுவ வியாபாரம் மூலம் தங்கள் நாட்டின் வெளி யுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.