what-they-told

img

மின் இணைப்புக்கான டெபாசிட், பதிவு கட்டணம் பல மடங்கு உயருகிறது

சென்னை, செப்.10- தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை ரூ.1,000 முதல் ரூ.1,800 வரை  உயர உள்ளது. கஜா புயலில் ஏற்பட்ட மின்சேதத்தை சீர மைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சார வாரியம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. எனவே அதனை மீட்டெடுப்ப தற்காக பதிவுக்கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின்பயன்பாடு உள்ளிட்ட பல கட்டணங்கள் அடங்கிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்த மின் வாரியம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி  மாதம் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தி டம் மனு அளித்த மின்சார வாரியம் வைப்புத் தொகை ரூ.1,600 என்று நிர்ணயிக்கப்பட்ட கட்ட ணத்தை ரூ.4 ஆயிரத்து 600 ஆக மாற்றி அமைக்கும்படி கூறியிருந்தது. இந்த நிலையில் இந்த மனு குறித்து விவா திப்பதற்காக தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மாநில ஆலோசனைக் கூட்டத்தில் மின்சார வாரியம், தொழில், வணி கம், நுகர்வோர், கல்வி என பல்வேறு துறை களை சேர்ந்த குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மின்சார வாரியத்தின் நிதி  நெருக்கடி குறித்தும், மின்சார இணைப்புக்கான  டெபாசிட் தொகையை உயர்த்துவது குறித்தும்  விவாதிக்கப்பட்டது. இதற்கு குழு உறுப்பி னர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. நுகர்வோர்கள் முன்மொழிந்த கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

மின்சார வாரியத்துக்கு இயற்கை பேரிடர்  போன்ற பல்வேறு காரணங்களால் இழப்பு  அதிகமாகி வருகிறது. இதனை சரி செய்ய மின்சார இணைப்புக்கான டெபாசிட் தொகையை உயர்த்துவது குறித்து விவா தித்தோம். கட்டண உயர்வு குறித்து பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களிடமும் விரை வில் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளோம். கட்டண உயர்வை பொருத்தவரையில் ஒரு  கிலோ வாட் திறன் கொண்ட இணைப்புக்கான வைப்பு தொகை ரூ.200-லிருந்து ஆயிரம் ரூபா யாகவும், மும்முனை இணைப்புக்கு ஒரு கிலோ  வாட்டுக்கு ரூ.600 முதல் ரூ.1,800 வரை உய ரும். அதேபோல் வீடுகளுக்கு மின்சார இணைப்புகளுக்கான பதிவு மற்றும் செயலாக்க கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.400 வரை உயரும். வைப்புத் தொகையில், புதிய தொழில்துறை  பிரிவுகளுக்கு குறைந்த மின் அழுத்த பகுதிக்கு ஒரு கிலோவாட்டிற்கு ரூ.600-லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அதிக மின்அழுத்த பகுதி நுகர்வோர்களுக்கு புதிய விகிதப்படி ஒரு கிலோவாட் ஆம்பியருக்கு ரூ.800-லிருந்து ரூ.3 ஆயிரத்து 100 ஆக இருக்கும்.

ஆய்வுக்கு கட்டணம்!

மின்இணைப்பு வழங்குவதற்கு நுகர் வோர்கள் இடத்தில் மின்சார அமைப்பை ஆய்வு  செய்து சோதனை செய்வதற்கு தற்போது வரை கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால், இனிமேல், ஒரு முனை இணைப்புக்கு (சிங்கிள்  பேஸ்) ரூ.580-ம், மும்முனை இணைப்புக்கு ரூ.1,920 கட்டணம் வசூலிக்கப்படும். 18.3 கிலோ  வாட்டுக்கு மேல் இருக்கும் உயர்மின் அழுத்த  வகையை பொறுத்தவரை ரூ.3 ஆயிரத்து 810 ஆக இருக்கும். இந்த கட்டண உயர்வு குறித்து திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.