சென்னை,அக்.28 ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் பரிதவிக்கும் விவகாரம் அனைவரை யும் பதைபதைப்புக்கு உள்ளாக்கி இருக்கி றது. சிறுவன் சுஜித்தை மீட்க அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார். தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் சிறுவன் சுஜித் விவ காரம் எதிரொலியாக தமிழகத்தில் பயன் படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார். தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளை கிணறு கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து அனைத்து பகுதிகளுக்கும் அதிகாரிகள் குழுவை நேரில் அனுப்பி ஆய்வு நடத்தவேண்டும் என்றும், மூடப்படாத ஆழ்துளை கிணறு கள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த கிணறுகளை மூடவேண்டும் என்றும் அந்த உத்தரவில் முதல்வர் குறிப்பிட்டுள் ளார்.