what-they-told

img

விரைவில் அம்மா ஆம்புலன்ஸ் சேவை

திருப்பூர்,செப்.28- திருப்பூரில் 7 புதிய அரசுப் பேருந்து களை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  பின்னர் அமைச்சர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், தீபாவளி பண்டிகைக் காக திருப்பூரிலிருந்து முன்னூறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை கால்நடை மருத்துவர்கள் அந்தந்த இடங்களுக்கு சென்று மேற்கொள்வார்கள். கால்நடைக ளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் துவக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.