what-they-told

img

‘வந்தே பாரத்’ ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட புரோட்டாவில் புழுக்கள்!

திருவனந்தபுரம், மே 4 - கேரள மாநிலத்தில், திருவனந்த புரம் துவங்கி காசர்கோடு வரை ‘வந்தே  பாரத்’ ரயில் சேவை தொடங்கப் பட்டுள்ளது. இந்த சேவையைக் கடந்த ஏப்ரல் 25 அன்று பிரதமர் நரேந்திர  மோடியே நேரடியாக வந்து கொடி யசைத்துத் தொடங்கி வைத்தார். இவ்வாறு ரயில் சேவை துவங்கப்பட்ட ஒரு வாரத்திற்கு உள்ளாகவே,  ‘வந்தே பாரத்’ ரயில் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானது. மல்லப்புரம் மாவட்டம் திரூரில், வந்தே பாரத் நின்று செல்லும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அறிவித்தபடி ரயில் நிற்காத நிலையில், சிலர் கற்களை வீசித் தாக்கி னர். இதில், ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்நிலையில் செவ்வாயன்று இந்த ரயிலில் இ-1 பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளுக்குப் புரோட்டா உணவாக வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவைப் பிரித்துப் பார்த்தபோது, அந்த புரோட்டாவில் புழுக்கள் இருந்தது பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ‘வந்தே பாரத்’ ரயில் காசர்கோடு சென்றடைந்ததும் இதுகுறித்து ரயில்  நிலைய அலுவலர்களிடம் பயணிகள் புகார் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் இந்த புகார் குறித்து பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்குத் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ள னர். இதனிடையே, வந்தே பாரத் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், தங்களுக்கு வழங்கப்பட்ட புரோட்டா உணவில் புழு இருந்ததை வீடியோ  எடுத்து, அதனை சமூகவலைதளங் களில் பதிவிடவே, அது நாடு முழு வதும் தற்போது விவாதங்களைக் கிளப்பி யுள்ளது.  இந்த வீடியோவைப் பார்த்த பலர், இதுதான்.. பிரதமர் நரேந்திர மோடி பகட்டாகத் துவங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் உண வின் லட்சணமா? என்று கேள்வி யெழுப்பி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.