what-they-told

img

25 வயது தலித் பெண்ணை அடைத்து வைத்து கும்பல் வல்லுறவில் ஈடுபட்ட சாமியார்!

அஜ்மீர், அக். 10 - காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம்  சாட்டப்பட்ட சாமியார் சஞ்சய் சர்மா, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப சாமி யார் ஆவார். பெண்ணின் குடும்பத்திற்காக பூஜைகளையும் செய்து வந்துள்ளார். முதலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை சாமியார் சஞ்சய் சர்மா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார். அதனை அவர் வீடியோவும் எடுத்துள்ளார்.  பின்னர் அந்த வீடியோவைக் காட்டி  பணப்பறிப்பில் ஈடுபட்டதுடன்,  பாதிக்கப் பட்ட தலித் பெண்ணின் கணவர் மற்றும் குழந்தையைக் கொன்று விடுவதாக மிரட்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

மயக்க மருந்து கொடுத்ததால் எத்தனை பேர் தன்னை வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள் என்பதே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிய வில்லை.  கடந்த செப்டம்பர் மாதம் தனியிடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட தலித்  பெண், அங்கு மயக்க மருந்து கொடுக்கப் பட்டு பலமுறை வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்.  இதனிடையே மனைவியைக் காண வில்லை என்று பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட சாமியார் சஞ்சய் சர்மா, செப்டம்பர் 27-ஆம் தேதி காவல்நிலையத்திற்கு வெளியே தலித் பெண்ணை விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.  எனினும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 7-ஆம் தேதிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகும் கூட, குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப் படவில்லை. தற்போது இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

;