what-they-told

img

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மேலும் சில மாற்றங்கள்

சென்னை,பிப்.15- தேர்வுமுறைகளில் மேலும்  சில மாற்றங்களை செய்துள்ள  டி.என்.பி.எஸ்.சி, கொள்குறி வகை தேர்வுகளில் இனி ஒரு  கேள்விக்கு பதில் அளிக்க வில்லை என்றாலும் விடைத் தாள் செல்லாததாக்கப் படும், கையெழுத்திற்கு பதில் கைரேகை பதிவு செய்யப்படும் என்பன உள்ளிட்ட 6 புதிய  சீர்திருத்தங்களை அறி வித்துள்ளது. குரூப் - 4, குரூப்-2ஏ தேர்வு  முறைகேடுகளை அடுத்து தேர்வு முறைகளில் சில மாற்றங்  களை செய்து கடந்த 7ஆம்  தேதி டி.என்.பி.எஸ்.சி அறி வித்திருந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2வது முறையாக தேர்வு முறைகளில் சில சீர்தி ருத்தங்களை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதன் முக்கிய அம்சங்களை அறிவித்துள்ளது. அதன்படி குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளுக்கு, இதுவரை பொது அறிவுத்தாள் கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், இனிவரும் காலங்க ளில் அது முதனிலை மற்றும் முதன்மை தேர்வு என இருநிலை களாக நடத்தப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.

அதே போல் 10 மணிக்கு தேர்வு தொடங்கினாலும், தேர் வர்களின் மெய்த்தன்மையை உறுதி செய்யவும், விதிமுறை களை விளக்க ஏதுவாகவும், 9 மணிக்கே தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் கட்டாயம் தேர்வெ ழுத அனுமதிக்கப்பட மாட்டார் கள் என்றும் கூறப்பட்டுள்ளது. காலை மாலை என இருவேளை களிலும் நடைபெறும் தேர்வு களின் போது, மாலை நடக்க  வேண்டிய தேர்வு 3 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்  பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் கொள்குறிவகை தேர்வுகளில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விடை தெரியவில்லை அல்லது  விடையளிக்க இயலவில்லை எனில், கூடுதலாக கொடுக்கப்ப டும் E என்ற வட்டத்தை கருமை யாக்க வேண்டும் என்றும், மொத்தம் எத்தனை வினாக்க ளுக்கு A, B, C, D, E  முறையே விடைகள் நிரப்பப் பட்டுள்ளன என்ற விவரங்களை தனியே பதிவு செய்து அதற்குரிய கட்டங்களை நிரப்ப  வேண்டும் என்றும் அறிவுறுத்தப்  பட்டுள்ளது.

இந்த விவரங்களை பதிவு  செய்வதற்காக மட்டும் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும் எனவும், A, B, C, D மற்றும் E ஆகியவற்றுள் எதேனும் ஒன்றை குறிக்கத் தவறினாலும் விடைத்தாள் செல்லாததாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாருடைய விடைத் தாளையும் இனங்கானமுடியாத வகையில் தேர்வு முடிந்ததும் தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய பகுதியும், விடை யளித்திருக்கும் பகுதியும்  தேர்வர்களின் முன்னிலையி லேயே தனித்தனியாக பிரித்து தேர்வு அறையிலேயே சீலிடப் படும் என்றும், சீலிடப்பட்ட உறை மீது அறையிலுள்ள சில தேர்வர்களிடம் கையொப்பம் பெறப்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. விடைத்தா ளின் விடையளிக்கும் பகுதி யில் தேர்வர்களின் கையொப் பத்துக்கு பதில், இடதுகை பெரு விரல் ரேகை பதிவு செய்யப்ப டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களை தேர்வா ணைய அலுவலகத்திற்கு கொண்டு வர தற்போதுள்ள முறை முற்றிலும் மாற்றப்பட்டு, GPS மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்ப டும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில், தேர்வாணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுபாட்டு அறை தொடங்கப்  படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்வாணையம் மற்றும் தேர்வர்கள் இடையேயான பிணைப்பை உறுதி செய்யவும், தகவல் பரிமாற்றத்தினை மேலும் எளிமைப்படுத்தவும் தேர்வாணைய இணைய தளத்தில் சிறப்பு தகவல் தளம் விரைவில் உருவாக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறி வித்துள்ளது.