what-they-told

img

திருச்சி ரயில் நிலையத்தில் மலையாள முன்பதிவு படிவம்

திருச்சி,நவ.16- ரயில்வே அலுவலக மொழியாக இந்தி, ஆங்கிலம் இருந்தா லும் முன்பதிவு படிவத்தில் அந்தந்த மாநிலத்தின் பிராந்திய மொழி இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் தெற்கு ரயில்வே துறையின் டிக்கெட் முன்பதிவு படிவத்தின் ஒருபகுதி தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு படிவம் மலையாள மொழியில் இருந்ததால் பயணி கள் அதிர்ச்சியடைந்தனர். கேரளாவின் டிக்கெட் முன்பதிவு படிவம் தவறுதலாக மாறி தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என்று ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.