weather

img

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும்...  தென்மண்டல வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை.... 

சென்னை
தமிழகத்தில் கோடைகாலம் ஆரம்பிப்பதற்குள் வெயில் கொளுத்தி வருகிறது. திருத்தணி உள்ளிட்ட சில இடங்களில் வெயில் சதமடித்து அடுத்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து அனல் காற்று வீசும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,"கடந்த சில தினங்களாக மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளிலிருந்து தரைக்காற்று தமிழகத்தை நோக்கி வீசிவருவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசும். வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகள் என 26 மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக (4 முதல் 6 டிகிரி வரை) இருக்கும்.

ஒரு சில பகுதிகளில் அதிகப்படியான அனல் காற்று வீசக்கூடும் என்பதால் பொது மக்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்கள் மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியே வருவதை தவிர்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

;