தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை இன்று காலை வரை இயல்பை விட 55% கூடுதலாகப் பெய்துள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூலை 28 வரையிலான தென்மேற்கு பருவமழை 177.4மி.மீ பதிவாகியுள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 7-11 செ.மீ அளவுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.