weather

img

வலுவிழந்த நிவர் புயல்... 29ஆம் தேதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வு

சென்னை:
சென்னைக்குத் தென்மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவில் நிலவிய நிவர் புயல் தொடர்ந்து வடமேற்குத் திசைநோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அப்போது பலத்த சூறைக்காற்று வீசியது

டன் மிகக் கனமழையும் பெய்தது.வடமேற்குத் திசையில் நகர்ந்து சென்ற புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மாநிலப் பகுதிக் குள் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே வரும் 29ஆம் தேதி தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

;