weather

img

வலுவடைந்த நிலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை... 

சென்னை
வங்கக்கடலில் உருவெடுத்துள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்ததுள்ளதால் தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பொழிந்து வருகிறது. மேலும் டெல்டா பகுதிகள், புதுச்சேரி மண்டலம் மற்றும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில் லேசான அளவில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விதிக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பான செய்தி குறிப்பில்,"நேற்று முதல் தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, இன்று முதல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில நிலை கொண்டுள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 2-ஆம் தேதி தென் தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இந்த நிகழ்வால் நவ.29 மற்றும் நவ.30-ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 29-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு வரும் டிசம்பர் 2-ம் தேதி வரை செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில பகுதிகளில்  டிச.1-ஆம் தேதி அன்று இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிச.2-ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, மாவட்டங்களில் அதிகளவு கனமழையும் தேனி, மதுரை, சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான கனமழை முதல் மிக கனமழையும்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.  

டிச.3-ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;