technology

img

ட்விட்டர் ப்ளு டிக் திட்டம் :நவம்பர்-29 முதல் மீண்டும் தொடக்கம்-எலான் மஸ்க்

ட்விட்டரில் ப்ளு டிக் சந்தா திட்டம், நவம்பர் 29 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

ட்விட்டரில் ப்ளு டிக் வசதி  உறுதிபடுத்தப்பட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், ட்விட்டருக்கு தலைமை பொறுப்பேற்ற எலான் மஸ்க் மாதம் 8 டாலர் செலுத்தி ப்ளு டிக் பெறும் முறையை கொண்டு வந்தார்.

இதனையடுத்து, போலிக்கணக்குகள் மூலம் பயனர்கள் இந்த ப்ளு டிக் வசதியை பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை அடுத்து எலான் மஸ்க் இந்த ப்ளு டிக் சந்தா திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்.

தற்போது எலான் மஸ்க் நவ.29ஆம் தேதி ட்விட்டரின் ப்ளு டிக் சந்தா திட்டத்தை மீண்டும் சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்கிறார். இந்த புதிய வெளியீட்டில், ஒருவரின் சரிபார்க்கப்பட்ட பெயரை திருத்துவது, ட்விட்டரின் சேவை விதிமுறைகளின்படி, ட்விட்டரால் அந்த பயனர் பெயர் உறுதிப்படுத்தப்படும் வரை ப்ளு டிக் சந்தா முறையை இழக்க நேரிடும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.