செங்கல்பட்டு, ஆக. 6- செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்கி வரு கின்றன. இதில் பணிபுரியும் ஊழியர்கள் கல் பாக்கம், சதுரங்கப்பட்டினம் மற்றும் அணு புரம் ஆகிய பகுதிகளில் மத்திய அரசு அமைத்துள்ள நகரியப் பகுதியில் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளை மத்திய அர சின் பொதுப்பணித்துறை நிர்வாகம் பராம ரித்து வருகிறது. சிஐஎஸ்எப் வீரர்கள் பாது காப்பு பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள், சதுரங்கப்பட்டினம் மற்றும் புதுப்பட்டினம் பகுதிக்கு சென்று வர நகரி யப்பகுதியின் நடுவே உள்ள பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்து வதற்காக அந்த பிரதான சாலை மூடப் பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பிரதானச் சாலை யில் ஆம்புலன்ஸ் வாகனங்களை அனு மதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்படுகிறது.
பிரதான சாலையை கிராம மக்களின் பயன்பாட்டுக்காக திறக்க வேண் டும் என கல்பாக்கம் சுற்றுப்புற கிராம மக்களின் கூட்டமைப்பினர் வியாழனன்று (ஆக.6) மத்திய பொதுப்பணித்துறை நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இதுகுறித்து, கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், தற்போது நோய் அச்சம் குறைந்த பிறகும் அந்த பிரதான சாலையை திறக்காமல் உள்ளனர். இதனால், மக்களின் வாகன போக்குவரத்து, அடிப்படை வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அவ சரத் தேவையாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நகரிய பகுதியின் பிரதான சாலையை வழக்கம்போல் திறக்க வேண்டும் பொதுப்பணித்துறை நிர்வாகம் மற்றும் கல்பாக்கம் காவல்துறையிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளோம்” என்றனர்.