செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு கிராமத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கூடுவாஞ்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் இரா.தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மண்டல செயலாளர் விடுதலைச்செழியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.மோகனன், மதிமுக மாவட்டச் செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் பேசினர்.