செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. தகவலறிந்து வந்த வட்டார வளர்சசி அலுவலர் மாலைக்குள் குடிதண்ணீர் குழாய்கள் சரிசெய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்படும் என உறுதியளித்த்தின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.