தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் துவங்கிய 10 ஆண்டு கள் நிறைவு நினைவு படுத்தும் வகையில் சங்கத்தின் சார்பில் மதுராந்தகம் செங்கல்பட்டு உத்திரமேரூர் ஆகிய இடங்களில் மனித வளையம் மாவட்ட தலைவர் முனுசாமி மாவட்ட துணைத்தலைவர்கள் வெள்ளி கண்ணன், அன்பு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் தே.லட்சுமணன் மாவட்ட செயலாளர் வி.அரி கிருஷ்ணன் மாவட்ட பொருளாளர் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.