tamilnadu

img

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 3 வார காலமாகத் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர். அவ்வாறு ஊடுருவி வரும் தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் வேட்டையாடி வரும் நிலையில், இன்று கிஷ்ட்வார் மாவட்டத்தில் உள்ள டாசன் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்ற பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுக்க இந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். 
 

;