tamilnadu

வேலூர், மதுரை, தேனி முக்கிய செய்திகள்

பாலாற்றில் ரசாயன கழிவு நீர்: தனியார் ஆலைக்கு சீல்
வேலூர், செப். 26-கழிவுநீரை சுத்திகரிக்காமல் ரகசியமாக வெளியேற்றி வந்த திருமலை கெமிக்கல் ரசாயன தொழிற்சாலைக்கு வரு வாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கி  வரும் திருமலை கெமிக்கல் என்னும் ரசாயன தொழிற்சாலை  20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந் நிறுவன கழிவுநீர் பாலாற்றிலும், விளை நிலங்களில் கலப்பதாக பல  ஆண்டுகளாக பொதுமக்கள் புகார் கூறிவந்தனர். புகாரை  கேட்காத அரசும், மாசு கட்டுப்பாட்டுத்துறையும் ஏற்கவே வில்லை. இந்நிலையில் தான் புளியங்கன்னு கிராம மக்கள்  தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத், காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, மாசுகட்டுப்பாட்டு வாரிய  பொறியாளர் சந்திரசேகர் உள்பட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, ரகசியமாக அமைக்கப்பட்ட வடிகால் வழியாக மழைநீர் வடிகாலில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருவது  தெரிய வந்தது. மேலும், பாலாற்றில் கலப்பதும் கண்டுப்பிடிக்  கப்பட்டது. இதையடுத்து, இந்த நிறுவனத்திற்கு சிப்காட் நிறு வனத்தால் வழங்கப்பட்டு வரும் நீர் இணைப்பை துண்டிக்கப்பட்டது. மேலும் ஆலைக்கு ‘சீல்’ வைத்தனர்.

கீழடி அகழாய்வில் மதுரை காமராசர்  பல்கலை. இணைந்து செயல்படும் துணைவேந்தர் அறிவிப்பு
மதுரை, செப்.26-  கீழடி அகழாய்வில்ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழ கம் இணைந்து செயல்பட உள்ளது, இதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்பட உள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் புதன்கிழமை கூறுகையில், மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை மனித இனத்தின் தோற்றம், வரலாறு, புலப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மரபணு அடிப்படையில் ஆய்வு செய்துள்ளது. இத்துறையின் முன்னாள் பேராசிரியர் பிச்சப் பன் மற்றும் தமிழக தொல்லியல் துறையின் முதன்மைச்செய லர் மற்றும் ஆணையருமான உதயச்சந்திரன் இருவரும் சென்று கீழடி தொல்லியல் பொருள்கள் மீதான ஆய்வு களில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் கீழடி உள்ளிட்ட தொல்லியல் துறை ஆய்வுகளில் காமராஜர் பல்கலைக்கழகமும், ஹார்வர்டு பல்கலைக்கழகமும் இணைந்து செயல்பட உள்ளது. இதில் கீழடி உள்ளிட்ட தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருள்கள், படிமங்கள் மீதான ஆய்வுகள் காம ராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயிரியல்துறை ஆய்வுக்கூடத்தில் நடைபெறும். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள முடியாத பரிசோதனைகள் ஹார்வர்டு பல்க லைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு கரிம பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் தொல்லியல் துறைக்கு வழங்கப்படும். இதற்காக தமிழக தொல்லியல் துறையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் மேற் கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகளுக்காக காம ராஜர் பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

நிலப்பிரச்சனையில் பெண் கொலை: கணவன், மனைவிக்கு  ஆயுள்தண்டனை
தேனி,செப்.26- வருசநாடு அருகே அண்ணனின் மனைவியை கொலை செய்த கணவன் -மனைவிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தேனி மகிளா நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வருசநாடு அருகே உள்ள ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சோலைமலை(45). இவரது மனைவி செல்வக்கனி. சோலைமலைக்கும் இவரது அண்ணன் ராஜாங்கத்திற்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தநிலையில் ராஜாங்கத்தின்மனைவி அனுச்சியம்மாளுக்கும் இவர்களுக்கும் 2012 டிசம்பர் 28ம் தேதி பிரச்னை முற்றியது. இதில் சோலைமலையும், செல்வக்கனியும் சேர்ந்து அனுச்சியம்மாளை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததுடன், தண்ணீரில் மூழ்க வைத்து கொலை செய்தனர்.பின்பு தூக்கில் தொங்க விட்டனர். கடமலைக்குண்டு காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.இது தொடர்பாக வழக்கு தேனி மகிளா கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி கீதா நேற்று தீர்ப்பளித்தார். இதில் இருவருக்கும் ஆயுள் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதமும், தடயத்தை மறைத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.