சென்னை, ஆக.12- நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரி ழந்த குடும்பங்களுக்கு கட்சி சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிய திமுக தலை வர் மு.க. ஸ்டாலின், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் நிதி யிலிருந்து 10 கோடி ரூபாய் வரை நிவாரணப் பணி களுக்காக ஒதுக்கப்படும் என்று கூறினார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கொட்டி வந்த கனமழை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப் பட்டது. அவலாஞ்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்து சகஜ நிலைக்கு திரும்பி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டா லின், பாதிக்கப்பட்ட இடங்களை 2வது நாளாக பார்வையிட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். முதல் நாளில் அவலாஞ்சி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட ஸ்டாலின், இரண்டாவது நாளில் எமரால்டு பகுதியில் பாதிக்கப்பட்ட இடங் களைப் பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், நிவா ரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.