tamilnadu

பள்ளிகள் திறந்தும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கவில்லை

வேலூர், ஜூன் 16- பள்ளிகள் திறந்து 2 வாரங்களாகியும் மாணவர்க ளுக்குப் புத்தகங்கள் இது வரை வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி யின் மாவட்டச் செயலர் எஸ்.தயாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் இந்த ஆண்டு கடும் வெயில் நில விய நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறக்கும் நாளை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள், அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திட்டமிட்டபடி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அன்றைய தினமே மாண வர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால் பள்ளிகள் திறந்து இரண்டு வாரமாகியும் மாணவர்களுக்கு இது வரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் மாணவர்களுக்கு உடனடியாக புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு தவறிய மாண வர்கள், பழைய பாடப்புத்தக த்தை பயன்படுத்தி ஒரு தேர்வு மட்டுமே எழுத முடியும். அடுத்த தேர்வுக்கு புதிய புத்தகத்தை பயன்படுத்தியே தேர்வு எழுத முடியும் என அரசு அறிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி படிக்காத பாடத்தில் எப்படி மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற இயலும்? எனவே, இன்னும் 2 தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டத்தின்படியே தேர்வு எழுத 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும் அனு மதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.