tamilnadu

img

11 ஆவது நாளாக முருகன் உண்ணாநிலை

வேலூர்:
தனது மனைவி நளினியுடன் காணொலி அழைப்பில் பேச அனுமதி கோரி வேலூர் மத்திய சிறையில் 11ஆவது நாளாக முருகன் உண்ணாநிலையை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடன், காணொலி அழைப்பில் பேச அனுமதிக்கக்கோரி கடந்த ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 11ஆவது நாளாக  (ஜூன் 11) உண்ணாநிலையை மேற்கொண்டுவருகிறார்.

நளினி, முருகனின் சந்திப்பு மாதம் ஒருமுறை நடைபெற்றுவந்தது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், அவர்களது சந்திப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் நளினியிடம் காணொலி அழைப்பில் பேச முருகன் கடைப்பிடிக்கும் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடும்படி சிறைத் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.11 நாள்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் முருகனுக்கு உடல் சோர்வு காரணமாக குளுகோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றுவது என்று தற்போதைக்கு செய்யப்பட்டுள்ளது.
 

;