tamilnadu

img

வேலூர் சிறையில் 17வது நாளாக முருகன் உண்ணாநிலை

வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் முருகன் 17-வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு  வருகிறார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறை தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்க சிறைத்துறை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.இதனால், முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாநிலை மேற்கொண்டு வருகிறார். முருகனின் உடல்நிலை சோர்வடைந்தால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 17 நாட்களாக உண்ணாநிலை மேற்கொண்டு வரும் முருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.இந்த போராட்டத்தை கைவிடும்படி  அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். முருகனின் உடல்நிலை குறித்து தினமும் சென்னை சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

;