வேலூர், ஆக. 16- வேலூர் மாவட்டத்தில் இரண்டு மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் அமைக்கக் கோரி தமிழக ஆசிரியர் கூட்டணி யின் மாவட்டச் செயலாளர் பொன்.வள்ளு வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி ஆகி யோர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் ஐந்து கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற மழலையர் மற்றும் மெட்ரி குலேஷன் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிகள் என வேலூர் மாவட்டத்தில் 1,266 பள்ளிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 980 பள்ளிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,168 பள்ளிகளும் உள்ளன. இந்த மூன்று மாவட்டங்களில் வேலூர் மாவட்டத்தில்தான் அதிககளவில் பள்ளிகள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் மட்டுமே உள்ளது. வேலூர் மாவட்டத்தை வேலூர், குடி யாத்தம் என இரண்டு கோட்டமாகவும், ராணிப் பேட்டை, மாவட்டத்தை ராணிப்பேட்டை, அரக்கோணம் என இரண்டு கோட்டமாகவும், திருப்பத்தூர் மாவட்டத்தை திருப்பத்தூர், வாணியம்பாடி என ஆறு வருவாய் கோட்டங் கள் உருவாக்கப்பட்டன. கோட்டத்திற்கு ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் உள்ள நிலையில், குடியாத்தம் கோட்டத்தில் மட்டும் கல்வி அலுவர் அலுவலகம் இல்லை. எனவே குடியாத்ததை மையப்படுத்தி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளன.