வேலூர், செப். 19- வேலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வங்கக்கடலில் காணப்படும் வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சல னம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, வேலூர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சாரலுடன் தொடங்கிய மழை, படிப்படி யாக அதிகரித்து மாவட்டம் முழுவதும் மிதமா னது முதல் பலத்த மழை பெய்தது. வேலூர், திருப்பத்தூர், அணைக்கட்டு, ஆற்காடு, காட்பாடியில் பலத்த மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதனால், முக்கிய சாலை களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேலூரில் புதிய பேருந்து நிலையம், காமராஜர் சாலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, கிரீன் சர்க்கிள் உள்பட பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். இதற்கிடையே, ஒடுகத்தூரில் உள்ள உத்தரகாவிரி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல், அம்ரிதி வனப்பகுதியிலுள்ள அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், நாக நதியில் தரைப்பாலம் தொடும் அளவுக்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேலூர் மாவட்டத்திலும் பரவலான மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நள்ளிரவு முதல் விடிய விடிய ஆற்காடு, திருவலம், வாலாஜா, அணைக்கட்டு, குடியாத்தம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஆம்பூரில் 35.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.