tamilnadu

img

மின்இணைப்பு கிடைக்காததால் நலிந்துவரும் கயிறு தயாரிக்கும் தொழில்

கயிறு தயாரிக்கும் தொழிலுக்கு  மின் இணைப்பு கிடைக்காத தால் தொழில் நலிவடைந்து வரு கிறது. எனவே தொழிலை மேம்ப டுத்த மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர்,  குடியாத்தம், அம்மூர், கே.வி.குப்பம்  ஆகிய பகுதிகளில் தேங்காய் நார்களில் இருந்து கயிறு தயா ரிக்கும் தொழில் அதிகளவில் நடை பெறுகிறது. காட்பாடியை அடுத்த கிளித்தான்பட்டறையிலும் கயிறு தயாரிப்பது குடிசைத்தொழில் போன்று நடைபெறுகிறது. அந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கயிறு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். 50 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் அந்த தொழி லில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள்  வாழ்க்கையில் எந்த முன்னேற்ற மும் ஏற்படவில்லை. இன்றும் அவர்கள் குடிசை வீட்டில்தான் வாழ்கிறார்கள். இருக்கும் இடத்திற்கும் பட்டா கிடையாது. இந்த கயிறு தயாரிக்கும் பணி யில் அதிகளவில் பெண்கள் ஈடு பட்டுள்ளனர். கிளித்தான்பட்டறை யில் காட்பாடியில் இருந்து குடி யாத்தம் செல்லும் சாலை ஓரத்தில் எங்குபார்த்தாலும் பெண்கள் கயிறு  தயாரிப்பதை பார்க்க முடிகிறது. குடியாத்தம் பகுதியில் அதிகள வில் தேங்காய் விளைவதால், அங்கு  10க்கும் மேற்பட்ட நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளன. இங்கி ருந்து நார்களை வாங்கி வந்து இவர்கள் கயிறு தயாரித்து வரு கிறார்கள். குடியாத்தத்தில் 35 கிலோ எடைகொண்ட ஒரு கட்டு  தேங்காய் நார்களை ரூ.850 கொடுத்து வாங்கி வந்து ஒருநாள்  தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் காயவைத்து அதை கயிறாக தயாரிக்கிறார்கள்.  ஒருபெண் இயந்திரத்தை இயக்க 2 அல்லது 3 பெண்கள் இணைந்து தேங்காய் நார்களை அதில் கோர்த்து கயிறாக மாற்று கிறார்கள். இதில் உயர்ந்த கட்டி டங்களில் கட்டி பெயிண்டு அடிக்க வும், கிணறுகளில் தூர்வாருவ தற்கும் பயன்படுத்தும் பெரிய அள விலான கயிறும் தயாரிக்கப்படு கிறது. அடுத்து புதிய வீடுகளில் சாரம்  கட்டுவதற்கு, கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு என தனித்தனி யாக 3 வகையான கயிறுகளை தயா ரிக்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் கயிறு கள் சித்தூர், திருப்பதி பகுதிகளுக்கு  அதிகளவில் அனுப்பி வைக்கப்படு கிறது. வேலூர் மாவட்டம் சோளிங்க ரில் உள்ள மொத்த விற்பனை கடைக்கும் அனுப்பி வைக்கப்படு கிறது. ஒருநாள் முழுவதும் கயிறு தயாரித்தால் ரூ.120 முதல் ரூ.150 வரை கூலியாக கிடைப்பதாகவும், மழைக்காலம் என்றால் கயிறு தயா ரிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் தற்போது பெரும்பா லான இடங்களில் மின்சாரம் மூலம்  கயிறு தயாரிக்க தொடங்கி விட்ட தால், அவ்வாறு தயாரிக்கப்படும் கயிறுகள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், கையால் தயா ரிக்கப்படும் கயிறுகள் விற்பனை குறைந்து விட்டதாகவும் தெரிவித்த னர்.  மேலும் 250 ரூபாய்க்கு ஒரு கட்டு நார் வாங்கிய போதும், தற்போது 850 ரூபாய்க்கு நார்  வாங்கும்போதும் கயிறு விலை மட்டும் உயரவில்லை. இதனால் இந்த கயிறு தயாரிக்கும் தொழில் நலிந்து வருவதாக தெரிவித்தனர். கயிறு தயாரிப்பில் ஈடு பட்டுள்ளவர்கள் படிக்காத பெண்  கள் மட்டுமின்றி பட்டதாரிகள், செவி லியர் படிப்பு முடித்தவர்கள், என்ஜி னீயரிங் படித்தவர்களும் இந்த கயிறு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் கையால் கயிறு தயாரிக்கவேண்டிய நிலை உள்ளது. எனவே மின் இணைப்பு கேட்டால் தொழில் நடைபெறுவது புறம்போக்கு இடம் ஆகையால் மின் இணைப்பு வழங்க முடியாது எனக் கூறுகிறார்கள். எனவே கயிறு தயாரிப்பதற்கு மின் இணைப்பு கொடுத்து, தொழில் வளர்ச்சிபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஹென்றி

;