tamilnadu

செங்கல் கால்வாயில் கொத்தடிமைகள் அரசு நிர்வாகம் மீட்க சிபிஎம் வலியுறுத்தல்

செங்கல் கால்வாயில் கொத்தடிமைகள் அரசு நிர்வாகம் மீட்க சிபிஎம் வலியுறுத்தல்

சிதம்பரம், ஜூன் 22 - 
செங்கல் கால்வாயில் கொத்தடிமைக ளாக பணியாற்றி மழை பணத்தைக் கேட்டு மிரட்டி பணம் தராத பட்சத்தில் வயதான மூதாட்டியை அழைத்துச் செல்வதால் நடவடிக்கை எடுக்க சிபிஎம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தில் பொறுப்பு சாராட்சியர் சந்திரகுமாரை சிபிஎம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், ஒன்றியக் குழு உறுப்பி னர் சுனில்குமார் மற்றும் மூத்த உறுப்பினர் கற்பனைச் செல்வம் மற்றும் உடையான் மேடு கிராம மக்கள் சந்தித்தனர். அப்போது கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளனர்.
அந்த மனுவில், சிதம்பரம் அருகே உடையான்மேடு கிராமத்தில் வசிக்கும் பாலாஜி மற்றும் இவரது மனைவி ஆகிய இருவரும் திருவாரூர் அருகே உள்ள திருச்சேறை கிராமத்தில் செல்வகுமார் என்பவர் நடத்தி வரும் செங்கல் கால்வாயில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் செங்கல் தயார் செய்து வைத்துள்ள போது மழை திடீரென பெய்ததால் 13 ஆயிரம் செங்கல்கள் வீணாகி உள்ளது.
இதற்கு சம்பந்தப்பட்ட பாலாஜி அவரது மனைவி தான் காரணம் என கூறி பணத்தை கட்ட வேண்டும் என மிரட்டியுள்ளனர். கால்வாயில் ஓய்வு இல்லாமல் இரவு பகல் என அனைத்து நேரங்களில் வேலை செய்ய அறிவுறுத்தியதால் மன உளைச்சல் அடைந்த பாலாஜி அவரது மனைவியை செங்கல கால்வாயிலேயே விட்டுவிட்டு ஊருக்கு வந்து பணத்தை தயார் செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை செங்கல் சூளை உரிமையாளர் பாலாஜி வீட்டிற்கு வந்து பணத்தைக் கேட்டுள்ளார். இவர்கள் சுய உதவி குழு மூலம் பணத்தை எடுத்து தருவதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்காத செங்கல் சூளை முதலாளி செல்வகுமார் பாலாஜியின் 60 வயது பாட்டியை பணம் கொடுக்கும் வரை இவரை அழைத்துச் செல்கிறேன் என வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து தில்லை காவல் நிலை யத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சிதம்பரம் சார் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு வில் குறிப்பிட்டுள்ளனர். சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு வெளியே வந்த பாலாஜியின் மனைவி கர்ப்பிணி என்பதால் மயக்கம் அடைந்து கீழே விழுந்தால் உடனடியாக இவர்களை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.