வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3 அன்று நடைபெற்றது. இதில் ஜனநாயகக்கட்சியின் சார்பில் ஜோ பைடனும், குடியரசுக்கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 4 அன்று துவங்கியது.
மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதி ஆக முடியும். இதில் மாலை 6 மணி நிலவரப்படி ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், அதிபர் டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஜனநாயகக் கட்சியின் ஆதரவு மாநிலங்களான கொலொராடோ, கனெக்டிகட், டெலாவர், இல்லினாய்ச், மசாச்சூசெட்ஸ்,, நியு மெக்சிகோ, வெர்மோந்த், வர்ஜினியா ஆகிய மாநிலங்களில் ஜோ பைடன் முன்னிலையில் உள்ளார். டொனால்டு டிரம்ப், புளோரிடா மாநிலம்,அயோவா, ஓஹையோ, டெக்சாஸ்,ஜார்ஜியா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் முன்னிலையில் உள்ளார்.
உச்சநீதிமன்றம் செல்வேன் : டிரம்ப் தேர்தலில் முடிவுகள் வெளியாகி வந்த நிலையில் வெள்ளை மாளிகையில் ஆதரவாளர்கள் மத்தியில் ஜனாதிபதி டிரம்ப் பேசுகையில், வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. பெரிய கொண்டாட்டத்திற்காக நாம் காத்திருக்கிறோம். தேர்தல் முடிவில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்வேன். தேர்தலில் மோசடி நடப்பதால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று தெரிவித்தார்.