tamilnadu

img

வேறு நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை... 

வாஷிங்டன்
அமெரிக்க குடியேற்ற சேவைகள் அமைப்பு இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் சர்ச்சை செய்தியாக முளைத்துள்ளது. அந்த செய்தி யாதெனில் வேறு நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் அமெரிக்காவில் குடியேற தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதற்காக இந்த தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை தேர்தல் ஆதாயம் அல்லது சீன அரசின் மீதான வெறுப்புணர்வு நடவடிக்கை போன்றவற்றால் இந்த தடை உத்தரவு அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக அலை எழுந்துள்ளது. வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்ப் அரசின் இந்த தடை உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.