விவசாயிகள் மனு
சேலம், டிச. 2- சிண்டிகேட் கொள்முதல் முறையை மாற்றி பழைய முறையில் மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கட லூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மரவள்ளிக்கிழங்கு விவ சாயம் செய்யப்படுகிறது. இதனை வியாபாரிகள் விவசாயிகளி டமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மரவள்ளி கிழங்குகளை விவசாயிகளிடம் இருந்து வியா பாரிகள் சிண்டிகேட் முறையில் கொள்முதல் செய்ய வேண்டும் என சேகோ சர்வ் கட்டாயப்படுத்தி வருவதால், மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள், வியாபாரிகள் மற் றும் இதனை நம்பியுள்ள தொழி லாளர்கள் என பல்லாயிரக்கணக் கானோர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, சிண்டிகேட் கொள் முதல் முறையை மாற்றி பழைய நடை முறையிலேயே மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் செய்ய வேண் டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். இந்நிலையில், உள் ளாட்சி தேர்தல் அறிவிப்பால் மனுக்கள் பெறப்படாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட புகார் பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 50 ஆண்டு காலமாக நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வந்த மரவள்ளிக் கிழங்கு தற்போது சிண்டிகேட் முறையில் கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது. மரவள்ளிக் கிழங்கை கொடுத்த உடனே கிடைக்க வேண்டிய பணம், புதிய முறையில் கிழங்கை அரைத்து, மாவாக்கி பின்னர் அதன் தரத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய் யப்படுவதால் விவசாயிகள் மட்டு மின்றி அதனை நம்பியுள்ள அனைத்து தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினர்.